நயன்தாராவுடனான காதல் உறவை முறித்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா.. அவரின் மனைவி யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க.!

நயன்தாராவுடனான காதல் உறவை முறித்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா.. அவரின் மனைவி யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க.!



Prabhu deva married after breakup with nayanthara

தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி நடிகர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை உருவாக்கிக்கொண்டு பிரபலமானவர் பிரபு தேவா. பிரபு தேவாவுடன் நடனமாடிய ரம்லத் என்பவரை காதலித்து 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா

பிரபுதேவா, ரம்லத் தம்பதியர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் இவரின் முதல் மகன் புற்றுநோயால் இறந்துவிட்டார். அந்த சமயத்தில் விஜய் நடித்த 'வில்லு' படத்தில் இயக்குநராக இருந்தார். அப்படத்தின் கதாநாயகியான நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இதன்பின், இருவரும் ஒன்றாக வாழ தொடங்கியதை அறிந்த பிரபு தேவாவின் மனைவி காவல்துறை வரை சென்று பல போராட்டங்களை மேற்கொண்டு திரையுலகில் மிகப்பெரும் சர்ச்சையாக மாறியது
மேலும் மகளிர் அமைப்புகளும் ரம்லத்தின் போராட்டத்திலும் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.

நயன்தாரா

இந்த நிலையில் நயன்தாராவுடனான உறவை முறித்துவிட்டு சில வருடங்களுக்குப் பிறகு தனது மனைவியான ரம்லத் என்பவரையும் விவாகரத்து செய்தார். இதன்பின் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்த பிரபுதேவாவின் மனைவி யாரென்று தெரியாத நிலையில், சமீபத்தில் கன்னட நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.