சூப்பர் அப்டேட்... கோடையை குழுமையாக்க வருகிறது... ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2...

சூப்பர் அப்டேட்... கோடையை குழுமையாக்க வருகிறது... ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2...



Ponniyin Selvan movie second part release update

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன்  என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாக 400 கோடி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சொல்லியது போல் படம் வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.