பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.! எங்கு, எப்போது தெரியுமா?? வெளிவந்த அறிவிப்பு!!

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.! எங்கு, எப்போது தெரியுமா?? வெளிவந்த அறிவிப்பு!!



Ponniyin selvan audio launch in  September 6

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில்
 விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் அண்மையில் பொன்னியின் செல்வன் டீசர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 'பொன்னி நதி பாக்கணுமே' என்ற பாடலும் ரசிகர்களிடையே பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.