"அந்த மாதிரி கதைகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை" பொன்னியின் செல்வன் நடிகை பேட்டி.!

"அந்த மாதிரி கதைகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை" பொன்னியின் செல்வன் நடிகை பேட்டி.!



Ponniyin selvan actress interview

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான ஐஸ்வர்யா, தற்போது தமிழில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

பொன்னியின் செல்வன்

இதன் பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், கட்டாகுஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களிலேயே நடித்தாலும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி யு ட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில், "திரைத்துறையில் ஆண்கள், பெண்கள் என இருவரும் சமமே. இவ்வாறு இருக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி திரைப்படம் எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பொன்னியின் செல்வன்

திரைப்படம் என்பது நம் அன்றாட வாழ்க்கையுடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். சினிமாவிலும், நம் வாழ்க்கையிலும் சமநிலை நிலவும் திரைப்படங்களின் கதைகளை தான் நான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.