அடிக்காதீங்க.. எனும்போது ஈரக்குலையே நடுங்குகிறது; உறைய வைக்கும் சினிமா பிரபலங்களின் டுவிட்டர் பதிவுகள்.!

அடிக்காதீங்க.. எனும்போது ஈரக்குலையே நடுங்குகிறது; உறைய வைக்கும் சினிமா பிரபலங்களின் டுவிட்டர் பதிவுகள்.!



pollachi - sex tourcher issu - twitter cinima stars

பொள்ளாச்சியில்  20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



 

மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் இரத்தம் கொதித்து போனர். மேலும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் எனவும் குரல் எழுப்பி வந்தனர்.



 

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உத்தரவில் சதீஷ், வசந்த் குமார், சபரிராஜன் இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை கோவை மாவட்ட காவல்துறை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.



 

இந்நிலையில் இந்த வழக்கினை இன்று காலை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது இந்த வழக்கை CBI க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



 

மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக  திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர்.