கவர்ச்சி காட்சிக்கு 'நோ' சொன்னதால் பட வாய்ப்பு பறிபோனது" நிவேதா பெத்துராஜ் வேதனை..



Nivethaa pethuraj latest interview

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு தமிழில் 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் மூலமாக கதாநாயகியாக காலடியெடுத்து வைத்தார்.

Nivetha

இப்படத்திற்குப் பின்பு பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டி தற்போது வரலாகி வருகிறது. கவர்ச்சியான காட்சிகளில் இருப்பதை குறித்து வீட்டில் என்ன சொல்வார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நிவேதா பெத்துராஜ், "முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் மிகவும் கவர்ச்சியாக நடித்தேன்.

Nivetha

ஆனால் என் வீட்டில் இருப்பவர்கள் புரிந்து கொண்டார்கள். தற்போது கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். இதனால் பல பட வாய்ப்புகள் பறிபோனது. இனிமேலும் கவர்ச்சி படங்களில் நடிக்க போவதில்லை" என்று உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.