பிக்பாஸ் அக்ஷரா இப்படியொரு கிரிமினல் வழக்கில் சிக்கியவரா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? பரவி வரும் ஷாக் தகவல்!!

பிக்பாஸ் அக்ஷரா இப்படியொரு கிரிமினல் வழக்கில் சிக்கியவரா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? பரவி வரும் ஷாக் தகவல்!!



news-spread-about-bigboss-akshara

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் ஆர்மியும் உருவானது.

இந்நிலையில் தற்போது மாடலிங் துறையை சேர்ந்த அக்ஷரா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதாவது அவரது நிஜ பெயர் ஷ்ரவ்யா சுதாகர் என்றும் அவர் 2013ம் ஆண்டு கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் சிக்கியவர் எனவும் சமூக வலைதளவாசிகள் கூறிவருகின்றனர்.

மேலும் அதற்குப் பிறகு அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது பெயரை மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் டிவிக்கு அக்ஷரா ரெட்டி புதிதல்ல. அவர் 2018ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில்  பங்கேற்றவர் எனவும் கூறப்படுகிறது. அக்ஷதா குறித்து பரவி வரும் இந்த தகவல் உண்மையானதுதானா? இல்லையா? என்பது அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளித்தால்தான் தெரியவரும்.