நவராத்திரியில் பிறந்த அதிசய கன்று! ஆச்சரியத்தில் மூழ்கிய ஊர்மக்கள்! எப்படியிருக்கு பார்த்தீர்களா!! வீடியோ இதோ!!

நவராத்திரியில் பிறந்த அதிசய கன்று! ஆச்சரியத்தில் மூழ்கிய ஊர்மக்கள்! எப்படியிருக்கு பார்த்தீர்களா!! வீடியோ இதோ!!


New born calf have 2 head and 3 eyes

நப்ரங்க்பூர் மாவட்டம் குமுளி பஞ்சாயத்து பிஜப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனிராம் என்ற விவசாயிக்கு சொந்தமான பசுவிற்கு இரண்டு தலைகள் மூன்று கண்களுடன் வித்தியாசமான கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நப்ரங்க்பூர் மாவட்டம் குமுளி பஞ்சாயத்து பிஜப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிராம். இவருக்கு சொந்தமான  பசு ஒன்று அண்மையில் கன்று ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு சாதாரணமாக இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்கள் இருந்துள்ளது. இதனைக் கண்டதும் தனிராம் குடும்பத்தினர் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்த கன்றுக்குட்டி நவராத்திரி பண்டிகையின் போது பிறந்ததால் கிராமத்தினர் அனைவரும் அதனை துர்க்கையின் அவதாரமாக எண்ணி வணங்கியுள்ளனர். கன்றுவிற்கு இரு தலைகள் இருப்பதால் அது பசுவிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளது. இந்நிலையில் தனிராம் வெளியே பால் வாங்கி அதற்கு கொடுத்து வருகிறாராம்.
இந்த கன்றுக்குட்டி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.