
தன்னிடம் மோசமாக கேள்வியெழுப்பிய நபருக்கு நீலிமா இன்ஸ்டாகிராமில் நெத்தியடி பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எக்கச்சக்கமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகை நீலிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் அவர் ஹீரோயினாக மட்டுன்றி, பல தொடர்களில் மிரட்டலான வில்லியாகவும் நடித்து வருகிறார். 21 வயதிலேயே திருமணமான இவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நீலிமா அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது நபர் ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று மோசமாக கேட்டுள்ளார். அதற்கு நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தி. தயவு செய்து மனோதத்துவ மருத்துவரை பாருங்கள் என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement