என்னதான் ஆச்சு! முக்கிய சீரியலிருந்து விலகிய நடிகை நீலிமா ராணி!
என்னதான் ஆச்சு! முக்கிய சீரியலிருந்து விலகிய நடிகை நீலிமா ராணி!
தமிழில் 2005 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் மற்றும் சதா நடிப்பில் வெளியான பிரியசகி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நீலிமா ராணி. அதனை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இன்று இவரின் நெகட்டிவ் கதாபாத்திரத்தை கூட ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.
இவர் நடிப்பில் வெளியான செல்லமே, வாணி ராணி, தென்றல் போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான அரண்மனை கிளி என்ற சீரியலில் சிறந்த வில்லியாக நடித்து வருகிறார்.
ஆனால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட இவர் அதில் தான் இந்த சீரியலிருந்து விலக உள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.