யாருமே இல்லாதபோதும், அவர்தான் எப்போதும் என்கூட இருந்தார்! மேடையிலேயே போட்டுடைத்த நயன்தாரா!

யாருமே இல்லாதபோதும், அவர்தான் எப்போதும் என்கூட இருந்தார்! மேடையிலேயே போட்டுடைத்த நயன்தாரா!


nayanthara-talk-in-award-function

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் கதாநாயகியாக  அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

nayanthara

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியின் சினி விருது வழங்கும் நிகழ்ச்சி  சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான விருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது.  மேலும் அவருக்கு Sridevi Award for Inspiring Women of Indian Cinema என்ற விருதும் வழங்கப்பட்டது. 

அப்பொழுது பேசிய நயன்தாரா கூறுகையில், ரசிகர்களுக்கு நன்றி. நான் தற்போது சந்தோஷமாக மட்டுமின்றி மிகவும் நிம்மதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உங்களைப் பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும். அனைவரிடமும் அன்பாக இருங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.மேலும் எனக்கு கடவுள் மீது எப்போதும் நம்பிக்கை அதிகம். யாருமே இல்லாத பொழுதும் அவர்தான் என்னுடன் இருந்தார் என்று நயன்தாரா கூறியுள்ளார்