காதல் கணவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகை நயன்தாரா... அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா.?

காதல் கணவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகை நயன்தாரா... அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா.?



Nayanthara gave special gift for her husband

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் ஹனிமூனுக்காக ஸ்பெயின் சென்று புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி விக்னேஷ் சிவன் தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு நயன்தாரா துபாய் அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

உலகின் மிக உயரமான கட்டிடமாக போற்றப்படும் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர், நயன்தாரா அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், எனது பிறந்தநாள் என் குடும்பத்தினரின் பரிசுத்தமான அன்பாலும், என் தங்கம், என் மனைவியின் சர்ப்ரைஸாலும் நிறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.