"அன்றே கணித்த பயில்வான் ரங்கநாதன்"..  நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரத்தை புட்டுபுட்டுவைத்த சம்பவம்..!! 

"அன்றே கணித்த பயில்வான் ரங்கநாதன்"..  நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரத்தை புட்டுபுட்டுவைத்த சம்பவம்..!! 



Nayanthara Adopt Baby Issue Bayilvan Ranganathan

 

நானும் ரவுடிதான் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுடன், லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வந்த நயன்தாரா இருவரும் காதலித்தனர். இதன்பின்னர் பல வருடங்களாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் பிரம்மாண்டமாக தங்களின் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இருவரும் வெளிநாட்டிற்கு இன்பச்சுற்றுலாவுக்கு சென்ற நிலையில், நேற்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. 

nayanthara

இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறிவந்த நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுக்கும் விஷயத்தில் இருவரும் சட்டத்தை மீறியுள்ளதாக பரபரப்பு புகாரளித்தது தொடர்பான விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில், நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுக்கபோகிறார். அவர் அதிக அளவு கருத்தடை மாத்திரை உபயோகப்படுத்தியதாலும், அவருக்கு வயது அதிகம் என்பதாலும் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்முடிவை அவர் எடுத்துள்ளதாக நடிகர் பயில்வான் ரெங்கனாதன் ஏற்கனவே பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.