ஏ ஆர் ரகுமான் மீது பண மோசடி புகாரளித்த மருத்துவர்.. என்ன காரணம் தெரியுமா.?



Money Cheating case filled in ar rahman

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் இசையமைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

Ar

சமீபத்தில் "மறக்குமா நெஞ்சம்" எனும் பெயரில் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டார் ஏ ஆர் ரகுமான். இதில் மொத்தம் 20000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வாங்கிய நிலையில், 40000க்கும் மேற்பட்ட நபருக்கு டிக்கெட் விற்கப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த பிரச்சனை மிகப்பெரும் சர்ச்சையானதையடுத்து ஏ ஆர் ரகுமான் தரப்பில் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியை நடத்தவிருந்த ஏ ஆர் சி டி சி கம்பெனியின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

Ar

இது போன்ற நிலையில், தற்போது இந்நிகழ்ச்சி ரத்தானத்தையடுத்து பணம் திருப்பி அனுப்பப்பட்ட மருத்துவர் ஒருவருக்கு ஏ ஆர் ரகுமான் கையெழுத்துயிட்டு காசோலையை வழங்கி இருக்கிறார். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று வந்துள்ளது. இதனால் மருத்துவர், ஏஆர் ரகுமானின் மீது புகார் அளித்துள்ளார்.