சேலையை தூக்கி சொருகி, அதிரடியாக களத்தில் இறங்கிய மீரா! அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்! வீடியோ இதோ!

சேலையை தூக்கி சொருகி, அதிரடியாக களத்தில் இறங்கிய மீரா! அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்! வீடியோ இதோ!


meera-mithun-new-latest-video-viral

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் பின்னர் பணமோசடி வழக்கில் தொடர்ந்து பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார்..

இந்நிலையில் மீராமிதுன் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Meera mithun

பின்னர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார்.அதனை தொடர்ந்து பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காக மிகமோசமான கவர்ச்சி உடையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதனால் ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சமீபத்தில் சரவணன் தனது தந்தைக்காக கட்டிய கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.அங்கு அவர் சேலை கட்டி குடும்ப பெண்ணாக கலந்துகொண்டு பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் அவர் அங்கு அருகில் உள்ள வயலில் இறங்கி சேலையை தூக்கி சொருகி நாற்று நட்டுள்ளார். மேலும் வீடியோவை அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.