எனக்கு ஒரே ஒரு ஆசை.. பிக்பாஸ்க்கு பிறகு மாயா போட்ட பதிவு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

எனக்கு ஒரே ஒரு ஆசை.. பிக்பாஸ்க்கு பிறகு மாயா போட்ட பதிவு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!



maya-post-after-bigboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஏழாவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பான நிலையில் 105 நாட்களைக் கடந்து கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

இதில் சீரியல் நடிகை அர்ச்சனா வெற்றியாளர் ஆனார். மணி சந்திரா இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மாயா பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி. எனது குறைகளை ஏற்றுகொண்டு என்னுடைய போராட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி. அன்பு மழையில் நனைய வச்சிட்டீங்க. எனது மரியாதையும், அளவில்லாத அன்பும் எனது இதயத்துடிப்பு நிற்கும் வரை இருக்கும். அந்த 105 நாட்கள் மரணப்படுக்கையிலும் மறக்காது. உங்களுக்காகதான் வேலை பார்க்க போறேன். எல்லாமே உங்களுக்காக தான். நீங்கள் எப்பொழுதும் என் கூட இருக்க வேண்டும்.

எனக்கு ஒரே ஒரு ஆசை, எனது ரசிகராக நீங்கள் இருந்தால், என்னை மட்டும் ரசியுங்கள். மற்றவர்களையும் ரசியுங்கள் ஆனால் வேறு ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களை வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் காதலியுங்கள். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார்  தூற்றட்டும். போய் நம்ம வேலையைப்  பார்க்கலாம். சத்தியமாக சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.