மிரட்டல் விடுவதாக விஜய் டிவி கொடுத்த புகார்.! பொங்கியெழுந்து முதல்முறையாக உண்மையை போட்டுடைத்த மதுமிதா.!!
மிரட்டல் விடுவதாக விஜய் டிவி கொடுத்த புகார்.! பொங்கியெழுந்து முதல்முறையாக உண்மையை போட்டுடைத்த மதுமிதா.!!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் மதுமிதா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மதுமிதா ஒப்பந்தத்தின்படி11,50,௦௦௦ பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை தருவதாக கூறிஇருந்தோம். ஆனால் அதனை முதலில் ஒப்புக் கொண்டு சென்றவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாக்கி பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்தப் புகார் குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மதுமிதா, விஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது. எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் மட்டுமே அனுப்பினேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். நான் யாரையும் எப்போதும் மிரட்டவில்லை. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என தெரியவில்லை. என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. நடிகர் கமல்ஹாசன்தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு இதனை சுமூகமாக முடித்து வைக்கவேண்டும் என கூறியுள்ளார்.