த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.! திடீரென தலைமறைவான மன்சூர் அலிகான்.!

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.! திடீரென தலைமறைவான மன்சூர் அலிகான்.!



Mansoor Alikhan who suddenly went into hiding

சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். அந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர் சில தினங்களுக்கு முன்னர், திரிஷா தொடர்பாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியது குறித்து மன்சூர் அலிகானுக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

Mansoor alikhan

இதனையடுத்து முன்ஜாமின் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எந்த சமயத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது தலைமுறைவாகியிருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

 தற்போது அவர் எங்கே உள்ளார் என்றே தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.