தளபதி படத்தை தொடர்ந்து, மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தளபதி படத்தை தொடர்ந்து, மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!



main-character-joined-with-rajini-after-long-years

பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மேலும் படம் வரும்  தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பிற்காக முதல்கட்ட பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேலும் இந்த படத்திற்கான நடிகர்கள்  நடிகைகள் மற்றும் படத்திற்கு உறுதுணையாக டெக்னீசியன்களை தேடும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

rajini

 இந்நிலையில் தளபதி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினியுடன் இணைந்தது பணியாற்றவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல திறன்களை கொண்டவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல்  தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் பங்காற்றியுள்ளார். மேலும் இவர்  ஒளிப்பதிவாளராக 5 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

rajini

இந்நிலையில் இவர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக சந்தோஷ் சிவன் தனது டுவிட்டரில் தளபதிக்கு பிறகு ரஜினி சாருடன் மீண்டும் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.