எனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் உள்ள தொடர்பு- முதல் முறையாக வாய் திறக்கும் நடிகை மகாலக்ஷ்மி!!

எனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் உள்ள தொடர்பு- முதல் முறையாக வாய் திறக்கும் நடிகை மகாலக்ஷ்மி!!



Mahalashmi talks about jaisree and her husband relationship

கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஓன்று சின்னத்திரை பிரபலங்கள் ஈஸ்வர், மகாலஷ்மி, ஜெயஸ்ரீ விவகாரம். தனது கணவருக்கும் நடிகை மகாலஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாகவும், தனது மகளை ஈஸ்வர் தப்பான எண்ணத்தில் தொடுவதாகவும் கூறி அவர் மீது புகார் தெரிவித்தார் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ.

Eswar

இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த நடிகை மஹாலஷ்மி இதுகுறித்து முதல் முறையாக பேசியுள்ளார். தனக்கும், தனது கணவருக்கும் பிரச்சனை என்பதால் எங்களுக்குள் விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும், ஈஸ்வர் தனக்கு ஒரு நண்பர் மட்டுமே, அவரை திருமணம் செய்துகொள்ளும் என்னமோ அல்லது எங்களுக்குள் எந்த உறவோ கிடையாது.

மேலும், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனது கணவருக்கு தோழியாம். 7 வருட திருமண வாழ்க்கையில் இந்த தகவல் இதுவரை எனக்கு தெரியாது. அப்படியென்றால் எனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் என்ன உறவு? என கேள்வி எழுப்பியுள்ளார் மகாலஷ்மி.