கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்!!
ஈஸ்வர் மகாலக்ஷ்மி விவகாரத்தில் மீண்டும் ஒரு புதிய திருப்பம்! தற்போது இப்படி ஒரு புகாரா?
கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஓன்று ஈஸ்வர், மஹாலஷ்மி, ஜெயஸ்ரீ விவகாரம். தனது கணவர் தன்னை கொடுமை படுத்துவதாகவும், தனது மகள் மீது தவறான எண்ணத்தில் கை வைப்பதாகவும், பிரபல நடிகை மஹாலக்ஷ்மியுடன் கள்ள தொடர்பில் இருப்பதாகவும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ அடுக்கடுக்கா புகார்களை தெரிவித்தார்.
இதனை அடுத்து, தனது மனைவிக்கும், மஹாலக்ஷ்மியின் கணவருக்கும்தான் கள்ள தொடர்பு இருப்பதாக ஈஸ்வர் மற்றொரு புறம் குற்றம் கூறினார். இதற்கு ஆதரவாக மஹாலஷ்மியும் தனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் உறவு இருப்பதாக கூறி பகீர் கிளப்பினார்.
இந்நிலையில் தேவதையைக்கண்டேன் தொடரில் நானும் ஈஸ்வரும் நடித்த புகைப்படங்களை வைத்துதான் ஜெயஸ்ரீ இவ்வாறு பேசி வருவதாகவும், தேவை இல்லாமல் தன்னை பற்றி அவதூறு கிளப்பியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை மஹாலக்ஷ்மி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.