4 ஆயிரம் பேரின் அவதூறு கருத்தால், இன்ஸ்டா பிரபலம் தற்கொலை: 16 வயதில் நடந்த சோகம்.!

4 ஆயிரம் பேரின் அவதூறு கருத்தால், இன்ஸ்டா பிரபலம் தற்கொலை: 16 வயதில் நடந்த சோகம்.!



Madhya Pradesh Ujjain Instagram Famous Pranshu Suicide 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியை சேர்ந்தவர் பிரன்ஷு (வயது 16). இவர் மேக்கப் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 ஆயிரம் பின்தொடர்பாளர்களை கொண்ட பிரன்ஷு, மேக்கப் சார்ந்த வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கடந்த தீபாவளி பண்டிகைக்கு பெண் போல சேலை அணிந்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். இது கடுமையான விமர்சனத்தை பெற்றது. 

அவரின் பதிவில் பலரும் பிரன்ஷுவை அவமதிக்கும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதனால் மனமுடைந்துபோன அவர், கடந்த நவம்பர் 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 

அவரின் தற்கொலைக்கான காரணம் முதலில் தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பின்தொற்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களே தற்கொலைக்கு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.

கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் அவதூறான கருத்துக்களை பதிலாக அளித்ததால், இறுதியில் பிரன்ஷு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.