சுந்தர் சி தொடர்ந்து பேய் படங்களாக எடுக்க இதுதான் காரணமா?? ஓப்பனாக போட்டுடைத்த நடிகை குஷ்பூ!!

சுந்தர் சி தொடர்ந்து பேய் படங்களாக எடுக்க இதுதான் காரணமா?? ஓப்பனாக போட்டுடைத்த நடிகை குஷ்பூ!!



Kushbu about Sundar c aranmanai 4 movie

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக, நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சுந்தர் சி. இவர் 1995ம் ஆண்டு வெளிவந்த முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கிய சுந்தர் சி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சுந்தர் சி தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media சார்பில் அருண்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் சுந்தர்.சி, தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சிங்கம் புலி, ஜேபி விச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி
 இசையமைத்துள்ளார். அரண்மனை 4 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

kushbu

அப்பொழுது பேசிய குஷ்பு கூறுகையில், "அரண்மனை படம் இதுவரை நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாக செல்ல சுந்தர் சிதான் காரணம். நான் அவருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன. அவர் தனது ஒவ்வொரு படத்திலும் எப்படி ரசிகர்களை மகிழ்விக்கலாம் எனவே யோசிப்பார். எங்கள் வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளுமே ஹாரர் படத்தையே மிகவும் விரும்புவர். அதனாலேயே சுந்தர் சி ஹாரர் ஜானரில் படம் எடுத்து வருகிறார். அரண்மனை படத்தின் 3 பாகங்களை விட இப்படம் மிகவும் அட்டகாசமாக இருக்கும்” என்று குஷ்பு கூறியுள்ளார்.