பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கஸ்தூரிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? ஆனால் அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கஸ்தூரிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? ஆனால் அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!



kasthuri get chance to be in secret room

பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

அவர் வீட்டிற்குள் வந்ததும் பல சர்ச்சைகள் கிளம்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. பின்னர் விருந்தினராக மற்றொரு போட்டியாளராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே  பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. பல சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

kasthuri

இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் சாண்டி, கவின், சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தநிலையில் கஸ்தூரி குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியே வந்ததும் கமல், கஸ்தூரியை சீக்ரட் அறையில் வைக்கப்போவதாக தெரிவித்தார். ஆனால், கஸ்தூரி என் குழந்தைகளின் குரலை கேட்டதும் எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் போல உள்ளது. எனக்கு ரகசிய அறைக்கு செல்ல விரும்பவில்லை என மறுத்துவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இது பிக்பாஸ்  பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.