படம் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுத கர்நாடக முதல்வர்.! என்ன காரணம் தெரியுமா.?

படம் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுத கர்நாடக முதல்வர்.! என்ன காரணம் தெரியுமா.?


karnataka cm crying after saw the movie

கன்னட திரைப்படமான "777 சார்லி" திரைப்படத்தில் முன்னணி நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கிறார். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 777 சார்லி படத்தை நேற்று திரையரங்குக்கு சென்று பார்த்துள்ளார்.

ஒரு நாய்க்கும், உறவுகள் இல்லாத இளைஞனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை விவரிக்கும் படமாக 777 சார்லி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இறந்து போன தனது நாயை இந்தப் படம் நினைவு படுத்தியதாக கூறினார். பின்னர் பேசிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்பதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மதம் அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான நாய் இறந்திருக்கிறது. அதன் இறுதிச்சடங்கின் போது அந்த நாய் மீது படுத்து பசவராஜ் கதறி அழுத புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.