நடிகை கல்யாணியா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.

நடிகை கல்யாணியா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.



Kalayani latest photo

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியான அள்ளிதந்த வானம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. அந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்து பலர் அவரை பாராட்டியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ரமணா, ஜெயம், குருவம்மா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

kalyani

அதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதிலும் ராதிகா நடிந்திருத்த அண்ணாமலை சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். 

அதனையடுத்து இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனதை கொண்டாடி உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சின்ன குழந்தை மாறி இருந்த கல்யாணிக்கு திருமணமாகி குழந்தை குடும்ப என்று உள்ளாரே என வியந்து வருகின்றனர்.

kalyani