திடீரென வேறுகட்சிக்கு பல்டியடித்து சேரன் செய்த காரியம்.! கிண்டலடித்து வச்சு செய்த முக்கிய பிரபலம்!!

திடீரென வேறுகட்சிக்கு பல்டியடித்து சேரன் செய்த காரியம்.! கிண்டலடித்து வச்சு செய்த முக்கிய பிரபலம்!!



kajal pasupathi talk about cheran

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி, ஆகிய  போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

அதனை தொடர்ந்து வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் விருந்தினராக வனிதாவும்  மீண்டும் களமிறங்கினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.  இந்நிலையில் கடந்த வாரம் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வெளியேறினார். 

இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவினுக்கு இடையே ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இருவரும் நெருங்கி பழகி வரும் நிலையில், கவினை குறித்து தவறாக பேசி வந்த சேரன் தற்போது கவினை புகழ்ந்து பேச தொடங்கியுள்ளார்.

மேலும் கவின் அடிப்படையில் நல்லவர் , நண்பர்களுக்கு நன்கு உதவுகிறார் என்பது போல பேசியிருந்தார். அந்த பிரமோ வீடியோ வெளியான நிலையில், நடிகை காஜல் பசுபதி அதனை கிண்டல் செய்யும் விதமாக  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் சேரப்பாவை தூக்க பிளான் பண்ணிட்டீங்க போல, நல்ல செய்றேல். கவினுக்கு சப்போர்ட் பண்றவங்கள விரைய பேருக்கு பிடிக்காதே. சேரப்பா கட்சி மாறிவிட்டார் என பதிவிட்டுள்ளார்.

kavin