நடிகர் சூர்யாவிற்கு நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த நீதிபதி! ஏன் தெரியுமா? வெளியான நெகிழ்ச்சி செயல்!

நடிகர் சூர்யாவிற்கு நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த நீதிபதி! ஏன் தெரியுமா? வெளியான நெகிழ்ச்சி செயல்!



judge-thank-surya-for-donate-30lakhs

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளநிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாததால் வரும் 30 ஆம் தேதி படம்  ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூர்யா சமீபத்தில் அந்தப் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து 1.5 கோடி ரூபாயை திரைப்பட குழுவிற்கு அளித்தார்.

இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்யவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஓடிடி மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டு லாபத்திலிருந்து சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்த ரூ.30 லட்சம் தொகையை தற்போது தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன் , கே.ஜெ.ஆர். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம்  மூலம் பயனடைவார்கள். சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார் என பிரபல சினிமா PRO டைமண்ட் பாபு தெரிவித்துள்ளார்.