"குழந்தைகளுடன் என் படத்தை யாரும் பார்க்க வராதீங்க" ஜெயம் ரவியின் வேண்டுகோள்..

"குழந்தைகளுடன் என் படத்தை யாரும் பார்க்க வராதீங்க" ஜெயம் ரவியின் வேண்டுகோள்..



Jayamravi movie iraivan got A certificate

1989ம் ஆண்டு "தொட்டில் சபதம்" என்ற திரைப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் "ஜெயம்" ரவி. 2003ம் ஆண்டு வெளியான "ஜெயம்" திரைப்படத்தில் தான் இவர் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, தாஸ், மழை, இதயத்திருடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Ravi

மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" இரண்டு பாகங்களிலும் ஜெயம் ரவியின் நடிப்பு அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் இவர் நடித்துள்ள "இறைவன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அகமது இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் கிடைத்துள்ளது. சினிமா வரலாற்றிலேயே ஜெயம் ரவியின் படத்திற்கு "ஏ" சான்றிதழ் கிடைப்பது இதுவே முதல் முறை.

Ravi

இந்நிலையில், இதுகுறித்துப் பேட்டியளித்த ஜெயம் ரவி, " இறைவன் படத்தை குழந்தைகளுடன் யாரும் பார்க்க வேண்டாம். ஏனெனில் குழ்நதைகள் இந்தப் படத்தை பார்த்து பயப்பட வாய்ப்புள்ளது. இது "ஏ" செர்டிபிகேட் படம். இதை நாங்கள் மறைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.