நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை! தீவிரமாகும் விசாரணை! இதுதான் காரணமா?

நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை! தீவிரமாகும் விசாரணை! இதுதான் காரணமா?



income-tax-raid-continue-in-vijay-house

அட்லீ  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளிவந்தது. மேலும் 170 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரித்த இப்படம் எதிர்பார்த்ததை விட பெருமளவில் வசூல் சாதனை செய்தது. 

இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் வரவு-செலவில் வரிஏய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலின்படி வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் இறங்கினர். அதன்படி பிகில் படத்தில் தொடர்புடைய ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் கல்பாத்தி அகோரம் குடும்பத்தாரின் வீடுகள்,  நடிகர் விஜய்யின் வீடு,  பைனான்சியர் அன்புசெழியனின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றை வருமானவரித் துறை அதிகாரிகளால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Bigil

 மேலும் அதன் அடிப்படையில் நெய்வேலி என்எல்சி அருகே மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று 5 மணிநேரம் கேரவனில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நடிகர் விஜய் சென்னை அழைத்து வரப்பட்டு அவரது வீட்டில் தீவிர  சோதனை நடைபெற்றது. 

 மேலும் நேற்று அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸ் தொடர்பில் உள்ள இடங்களில் கணக்கில் வராமல் ரூ.24 கோடி மற்றும் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து தற்போது பனையூரில் உள்ள விஜயின் இல்லத்தில் இரண்டாவது நாளாக தீவிர சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் பிகில் பட வரவு செலவை அடிப்படையாக கொண்டுதான் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறப்படுகிறது