எமோஷனல் தருணம்.. என் வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது.! செம ஹேப்பியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!!

எமோஷனல் தருணம்.. என் வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது.! செம ஹேப்பியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!!



ilayaraja-visit-to-devi-sri-prasath-music-studio

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது துள்ளலான இசையால், ரசிகர்களை கவர்ந்து முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசைஞானி இளையராஜா தனது ஸ்டூடியோவிற்கு வருகை தந்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், என் வாழ்நாள் கனவு நனவாகி விட்டது. நான் இசை என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன்னே சிறுவனாக இருந்தபோதே மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இசையை கேட்டு வளர்ந்துள்ளேன். நான் தேர்வுகளுக்கு படிக்கும்போது கூட அவரது இசை என்னைச் சுற்றி இருக்கும். நான் அவரது இசையை கேட்டு வளர்ந்தேன். அதுவே நான் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற வலுவான எண்ணத்தை எனக்குள் விதைத்தது. 

நான் இசைப்பாளரானதும் எனக்கென ஒரு ஸ்டுடியோவை உருவாக்கியபோது அங்கு  இளையராஜா சாருடைய பெரிய புகைப்படம் ஒன்றை வைத்தேன். என்றைக்காவது சார் எனது ஸ்டுடியோவிற்கு வருகை தருவார். அப்பொழுது அந்த புகைப்படத்தின் அருகில் நின்று நான் அவருடன்  புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு.

என் வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. எனது இசைக் கடவுளுக்கு நன்றி. எனது வாழ்வில் மிகவும் எமோஷனலான தருணம் என கூறி அவர் இசைஞானியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.