சித்ரா உயிரோடு இருந்திருந்தால், இன்று இவ்வளவு முக்கியமான நாளா?? கண்ணீருடன் உண்மையை உடைத்த பிரபலம்!!

சித்ரா உயிரோடு இருந்திருந்தால், இன்று இவ்வளவு முக்கியமான நாளா?? கண்ணீருடன் உண்மையை உடைத்த பிரபலம்!!



if-chitra-alive-her-marriage-done-today-vj-diya-emotion

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த ஆண்டு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் வரும் பிப்ரவரி  மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.  இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

       chitra

மேலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது ஹேமந்த்தான் என அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குறித்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விஜே தியா இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சித்ரா தற்போது உயிரோடு இருந்திருந்தால், இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.