திடீரென சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை! இதுதான் காரணமா? பகீர் புகாரால் பரபரப்பு!

திடீரென சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை! இதுதான் காரணமா? பகீர் புகாரால் பரபரப்பு!



hindi-serial-actress-simran-sachdeva-reeleave-from-seri

பாலிவுட்டில் டி.வி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சிம்ரன் சச்தேவா. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சோட்டி சர்தார்னி என்ற தொடரில் நடித்துள்ளார். சோட்டி சர்தாரினி தொடரில் ஹர்லீன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை மான்சி சர்மா நடித்து வந்தார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் சென்றநிலையில் அவர் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சிம்ரன் சச்தேவாவை நடித்து வந்தார். 

இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்  படப்பிடிப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்திற்கு நடிக்கவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் பல நடிகர் நடிகைகளுக்கு சம்பளமும் குறைக்கப்படுகிறது.

Simran singh

 இந்நிலையில் நடிகை சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவிதம் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது இதனை சிம்ரன் சச்தேவா ஏற்க மறுத்து,  தொடரில் இருந்து விலகி விட்டார்.

மேலும் இதுகுறித்து சிம்ரன் சச்தேவா பேட்டி ஒன்றில் கூறுகையில், ஏற்கனவே  நான் தொடரில் நடித்துகொண்டு இருந்தபோதே சம்பளம் ஒழுங்காக தரவில்லை. இப்போது 40 சதவீதம் சம்பளத்தை குறைத்து நிர்ணயித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் தவறாக நடந்து கொள்ள முயன்றார். மரியாதை இல்லாமலும் நடத்தினார். அதனால் தான் நான் அந்த தொடரில் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.