மனதை மிகவும் காயப்படுத்துகிறது.. நடிகர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை!! என்ன கூறியுள்ளார்!!



Gv prakash answer to people who criticize on divorce

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக, நடிகராக வலம் வரும் ஜிவி பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகியுமான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

விமர்சனத்திற்குள்ளான விவாகரத்து 

இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அதனை விமர்சித்தும் வந்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலளித்து ஜிவி பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

இதையும் படிங்க: ஓ!! ஜி.வி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்..

தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா??

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் உள்ள நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

மனதை காயப்படுத்துகிறது 

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 11 வருட திருமண வாழ்க்கை.! மனைவியை பிரிந்துவிட்டாரா ஜிவி பிரகாஷ்?? அவரே உடைத்த உண்மை!!