#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
விஜய் பட நடிகையுடன் லிவிங் டுகதரில் வாழ்ந்து வந்த அதர்வா.. உண்மையைப் போட்டு உடைத்த பிரபலம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் 2014 ஆம் வருடம் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் அதர்வா மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் இருந்து இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக சர்ச்சையை கிளப்பியுள்ளார் பத்திரிக்கையாளர் பயில்வான்.
மேலும் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகவும் பின் ஏதோ ஒரு காரணத்தால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்த பயில்வான் ரங்கநாதனை ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது சரியான செயல் இல்லை என்று நெட்டிசங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.