கூல்டிரிங்ஸ் குடித்த சில நிமிடங்களிலேயே இளம்பெண்ணிற்கு நேர்ந்த துயரம்! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!

கூல்டிரிங்ஸ் குடித்த சில நிமிடங்களிலேயே இளம்பெண்ணிற்கு நேர்ந்த துயரம்! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!


girl-dead-after-drinking-cool-drinks

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் இரு தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி முரளியுடன் சென்றுள்ளார். பின்னர் இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டு முரளியின் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ளனர். இதற்கிடையில் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் குளிர்பானம் குடித்த அந்த பெண் சில நிமிடங்களிலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன முரளியும், அவரது உறவினரும் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Juice

அதனைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்தது குறித்து போளுரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இதற்கிடையில் அந்த பெண்ணின் மரணம் குறித்து முரளியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அப்பெண்ணிற்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்ததாகவும், அதனால் குளிர்பானம் குடித்ததும் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த மாணவியின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.