13 நாட்களாக காணாமல் போன நடிகை ராதிகா! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

13 நாட்களாக காணாமல் போன நடிகை ராதிகா! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!



fans-feel-for-actress-rathiga


இந்திய அளவில் சன் தொலைக்காட்சி முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். இனளஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் சன்டிவி சீரியல் பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சன்டிவியில் இரவு 9.30 மணி என்றாலே ராதிகாவின் தொடர்தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்தது. சித்தி,அண்ணாமலை,செல்வி, செல்லமே, வாணிராணி,சந்திரகுமாரி என 6850 எபிசோட் நடித்துள்ளார் நடிகை ராதிகா. இவரின் நடிப்பின் திறமையால் முக்கால்வாசி தமிழ் மக்கள் இவருக்கு ரசிகர்களாய் உள்ளனர்.

Radhika

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக  9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த சந்த்ரகுமாரி தொடர் கடந்த மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து மாலை 6 : 30 மணிக்கு மாற்றப்பட்டது.

Radhika

இந்தநிலையில் சந்திரகுமாரி தொடரை மாலை 6:30 மணிக்கு மாற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த தொடரில் காணாமல் போன கதாபாத்திரமாக நடித்துவருகிறார். இனிமேல் அந்த தொடரில் ராதிகா நடிக்கமாட்டார் எனவும் பேசப்பட்டு வருகிறது. கடந்த 13 நாட்களாக நடிகை ராதிகா அந்த தொடரில் நடிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.