கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு ஜிகர்தண்டா 2... இயக்குனர் சங்கர் நெகிழ்ச்சி பதிவு!!



Famous director Sankar speak about jigarthanda movie

ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 ஆண்டு கழித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா 2 . தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுதற்குரியது. ஜிகர்தண்டா 2 படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனரான சங்கர் ஜிகர்தண்டா 2 படம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு தான் ஜிகர்தண்டா 2. சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் அதிரடியான பின்னணி இசை என்று குறிப்பிட்டுள்ளார்.