பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!



Famous actor jayashankar son photo viral

முதலில் மேடை நாடகங்களில் நடித்து பின் 1965 ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய்சங்கர். தனது அறிமுகத் திரைப்படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர்.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஜெய்சங்கர் அதிரடிக் கதாநாயகன், நகைச்சுவைக் கதாநாயகன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actor Jai Shankar

நடிகர் ஜெய்சங்கருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் சங்கர் கண் மருத்துவராக உள்ளார். சஞ்சய் சீரியலில் நடித்து வருகிறார். பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தான் சஞ்சய் தற்போது நடித்து வருகிறார்.