சூர்யவம்சம் படத்தின் கதை இவருக்காக எழுதியதா?? சரத்குமார் எப்படி ஹீரோவானார் பார்த்தீங்களா!!

சூர்யவம்சம் படத்தின் கதை இவருக்காக எழுதியதா?? சரத்குமார் எப்படி ஹீரோவானார் பார்த்தீங்களா!!


director-vikraman-talk-about-suryavamsam-movie

தமிழ் சினிமாவில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் சூர்ய வம்சம். படம் தற்போதும் 90'ஸ் ரசிகர்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்தராஜ், பிரியா ராமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சூர்யவம்சம் திரைப்படத்தை விக்ரமன் இயக்கியுள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. சூர்யவம்சம் திரைப்படம் வெளி வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

Vikraman

இந்நிலையில் சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமார் நடித்தது குறித்து இயக்குனர் விக்ரமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், தயாரிப்பாளர் சவுத்ரி விக்ரமனை அழைத்து சரத்குமாருக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என கூறினாராம். உடனே விக்ரமன் தான் எழுதி வைத்திருந்த குறித்து அவரிடம் தெரிவித்தாராம்.

முதலில் அந்த கதையை நடிகர் கார்த்திக்கை மனதில் வைத்துதான் விக்ரமன் எழுதினாராம். சௌத்ரி கூறியதால் தான் சரத்குமார் நடிப்பில் சூர்யவம்சம் படம் தயாரானது என இயக்குனர் விக்ரமன் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.