தயவுசெய்து உடனே வெளியேறுங்கள்.! சேரனுக்கு கோரிக்கை விடுத்து பிரபல இயக்குனர் வெளியிட்ட உருக்கமான பதிவு!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. மேலும் காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவ்வாறு அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் எதற்கும் பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சரவணன் மற்றும் சேரன் ஆகியோருக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அப்பொழுது சரவணன் சேரனை மிகவும் தரக்குறைவாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் போட்டியாளர்கள் பலரும் அவர் பேசியது தவறு என கண்டித்தனர், இந்நிலையில் தற்பொழுது ஆல்பம், வெயில்,அங்காடி தெரு, காவிய தலைவன் உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன் சார் வெளியே வந்து விடுங்கள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.