" நான் அஜித்திற்கு கதை சொல்ல மாட்டேன் " இயக்குனர் தங்கர் பச்சான் ஆதங்கம்.!



Director thangar bachan talk about ajith

அழகி, சொல்லமறந்த கதை, பள்ளிக்கூடம், அம்மாவின் கைபேசி போன்ற நல்ல கதையம்சமுள்ள படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். இவர் தற்போது "கருமேகங்கள் கலைகின்றன" படத்தை இயக்கி வருகிறார்.

Azhagi

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த தங்கர் பச்சான், அதில் நடிகர் அஜித் பற்றி கூறியிருந்தார். அவர் கூறினார், "அஜித் குடும்பத்தை நேசிக்க கூடியவர். அவருக்கு அவரது அப்பாவை மிகவும் பிடிக்கும். அப்பாவுக்காக தான் அந்த வீட்டைக் கட்டினார்.

அவரது அப்பாவின் இறப்புக்கு நானும், என் மகனும் சென்றிருந்தோம். அப்போது கூட என் மகனிடம் அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தார் அஜித். இப்போது அஜித் மிகவும் உயரத்திற்கு சென்றுவிட்டார். அதனால் நான் அவருக்கு கதை சொல்ல மாட்டேன். 

Azhagi

அவருக்கு நிறைய மார்க்கெட் வேல்யூ உள்ளது. இந்த நிலையில் அஜித் எனக்கு படம் செய்து கொடுப்பாரா அவரோடு இணைந்தால் அது அவருக்கு தகுந்த மாதிரியும், என் சாயலிலும் அந்தப் படம் இருக்கவேண்டும். இல்லையெனில் மன வருத்தம் தான் ஏற்படும்" என்று தங்கர் பச்சான் கூறினார்.