லியோவை குறித்து மிஷ்கினின் பரபரப்பு கருத்து..

லியோவை குறித்து மிஷ்கினின் பரபரப்பு கருத்து..



Director Miskin openup about Leo movie

2006ம் ஆண்டு "சித்திரம் பேசுதடி" என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் போன்ற எளிய கதைகள் மற்றும் காட்சியமைப்புகள் கொண்ட படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

Miskin

தற்போது மிஷ்கின் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், டிஜிட்டல் ட்ரீம்ஸ் கலை கண்காட்சியின் துவக்கவிழா, நேற்று சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் மிஷ்கின், மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மிஷ்கின், " நம் அனைவருடைய பார்வைகளும் இயற்கையை நோக்கியே இருக்கும். இங்கிருக்கும் ஓவியங்கள் அதை தான் நமக்கு காட்டுகின்றன. "லியோ" படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

Miskin

விஜய்க்கும் படம் மிகவும் பிடித்துள்ளது. லியோ மிகப்பெரிய வெற்றியை அடையும். செப்டம்பர் 30ம் தேதி நாம் மீண்டும் சந்திப்போம். பிசாசு 2 கண்டிப்பாக வரும். இங்கிருக்கும் அனைவருமே பிசாசு தான்" என்று ஜாலியாக மிஷ்கின் பேசியுள்ளார்.