ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை வரலட்சுமி..

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை வரலட்சுமி..



Controversial news about varalakshmi

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் வரலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். ஆதிலிங்கம் என்பவர் இவரிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

varalakshmi

சமீபத்தில், கேரளாவில் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300கிலோ போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தியதாக ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார். அதில் கிடைத்துள்ள பணத்தை ஆதிலிங்கம், சினிமாவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஆதிலிங்கம் முன்னர் வரலட்சுமியிடம் உதவியாளராக வேலை செய்தார் என்பதால் , அவரை பற்றி விசாரிக்க, என் ஐ ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

varalakshmi

இதனிடையே வரலட்சுமி, "எனக்கும், ஆதிலிங்கத்துக்கும் எந்த தொடர்பும் தற்போது இல்லை. அவர் என்னிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பே வேலையை விட்டுச் சென்றுவிட்டார். என்ஐஏ எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. என் அம்மாவிடம் தான் விசாரித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.