குட் நைட் பட இயக்குனருக்கு கால் செய்து கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன்.? என்ன காரணம்.!?

குட் நைட் பட இயக்குனருக்கு கால் செய்து கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன்.? என்ன காரணம்.!?



சிவகார்த்திகேயன் condition about his next movie


தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் முதன்முதலில் சின்ன திரையில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். இதன்பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வெள்ளி திரையில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார்.

Maveeran

முதன் முதலில் இவர் நடிப்பில் வெளியான மெரினா திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இப்படத்திற்கு பின்பு தற்போது கமலஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்குப் பின்பு குட் நைட் பட இயக்குனர் விநாயகர் சந்திரசேகரன் என்பவரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Maveeran

இது போன்ற நிலையில் குட் நைட் படம் திரையரங்கில் வெளியான போது இப்படத்தின் இயக்குனரை சிவகார்த்திகேயன் அழைத்து பாராட்டியதாகவும், சிவகார்த்திகேயனிற்காக கதை எழுத கூறியதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் கதையில் குத்து பாடல்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று இயக்குனரிடம் சிவகார்த்திகேயன் கண்டிஷன் போட்டுள்ளார் என்பது குறித்து செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.