சித்ரா ஏற்கனவே இறந்திருக்கவேண்டியது.. அவர் இறந்தபிறகு வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்..

சித்ரா ஏற்கனவே இறந்திருக்கவேண்டியது.. அவர் இறந்தபிறகு வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்..



Chitra first suicide attempt viral news

மறைந்த நடிகை சித்ரா இதற்கு முன்னதாக ஒருமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் நடிகை சித்ரா. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவருக்கு பலலட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவர் சமீபத்தில் ஹோட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹேம்நாத் என்பவரை காதலித்துவந்த சித்ரா இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடிந்த நாளில் ஹேம்நாத் சித்ரா மீது சந்தேகே பார்வையை வீசியுள்ளார்.

VJ Chitra

ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வரும்  சித்ராவிடம், இன்று யாருடன் நடித்தாய், யாருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடினாய் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்டு கொடுமை செய்துள்ளார் ஹேம்நாத். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதில் மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், சித்ரா இதற்கு முன்பாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை  செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும் போலீசார் விசாரணையில் ஹேம்நாத் கூறியுள்ளார். இந்த தகவல் சித்ரா ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.