அடுத்த கட்ட பணியை துவங்கிய சேரன் - வாழ்த்து கூறும் பிரபலங்கள்.
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. தற்போது போட்டியாளர்கள் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் கடைசியில் ஒருவர் மட்டுமே பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சத்தை வெல்ல முடியும். எனவே இந்த 5 லட்சத்தை மட்டும் எடுத்து கொண்டு யார் வெளியே போக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். உடனே கவின் அதனை ஒப்பு கொண்டு வெளியேறுகிறார்.
இந்நிலையில் சென்ற வாரம் வெளியான சேரன் அவர்கள் தற்போது புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அடுத்தக்கட்ட வேலையை ஆரம்பித்துவிட்டேன் என பதிவு செய்துள்ளார். அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் பிரபலங்கள் பலரும் சேரனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
மிக்க நன்றி சார்.... அடுத்த கட்ட பணிக்கு தயார். https://t.co/5JTZS7c5iI
— Cheran (@directorcheran) September 26, 2019