பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான். வெளியான புது தகவல்.
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 90 நாட்களை நெருங்கியுள்ள சீசன் 3 இன்னும் சில நாட்களில் முடிவடைய இருப்பதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் இப்போதில் இருந்தே மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது உள்ள 7 பேரில் சேரன் கவின், சேரன், லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நான்கு பேரில் இருந்து யார் இந்த வாரம் வெளியேற்றப்பட்ட உள்ளார் என்பதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, கவின் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ஷெரினை விட சேரன் மற்றும் லாஷ்லியா இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் அவர்களும் காப்பாற்றப்பட்டுள்னனர் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து ஷெரின் வெளியேறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.