தாலியை கழற்றிவிட்டு பிக்பாஸ் சென்றது ஏன்? முதன்முறையாக விளக்கம் அளித்த மதுமிதா.
பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் காமெடி நடிகை மதுமிதா. பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னை தமிழ்ப்பெண் என அடையாளப்படுத்திக் கொண்டு அதன் மூலம் பல்வேறு சண்டைகளையும் சந்தித்தவர்.
தமிழ் பெண் என கூறும் நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தாலியை கழற்றிவிட்டு வந்தது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் முதல் முறையாக இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் மதுமிதா.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் என்னிடம் உள்ள அனைத்து பொருட்களையும் சோதனை செய்தார்கள், அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும் என்பதால் தாலியை அணிய வேண்டாம் என்றார்கள்.
தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்க, டாஸ்க் செய்யும் போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்க, நானும் இதுகுறித்து எனது கணவனிடம் கேட்டேன் அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.