நான் குடிகாரியா? நேற்று என்ன நடந்தது? பிக் பாஸ் காயத்ரி விளக்கம்!

நான் குடிகாரியா? நேற்று என்ன நடந்தது? பிக் பாஸ் காயத்ரி விளக்கம்!



Bigg boss gayathri explanation about trunk and drive case

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் மிகவும் பிரபலமானவர் பிக் பாஸ் காயத்திரி. அவர் பிக் பாஸ் வீட்டின் உள்ள இருக்கும்போது அவர் செய்த செயல்களால் மக்கள் அவர் மிகுந்த கோவத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே அதிகாலையில் குடிபோதையில் காரை ஓட்டி சென்ற போது காய்த்ரி ரகுராம் போலீசிடம் சிக்கியதாகவும், போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததாகவும் செய்திகள் வேகமாக பரவியது.

இதைத்தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் காயத்ரி. அதில், “தாம் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என்னுடன் பணியாற்றும் ஒருவரை அவர் இடத்தில் டிராப் செய்ய சென்றிருந்த சமயம் போலீசார் வழக்கமான வாகன சோதனைக்காக எனது வண்டியையும் நிறுத்தினார்கள்.

bigg boss tamil

பின்னர் என்னை சோதனை செய்த காவல் துறையினர் என்னிடம் முறையான ஆவணங்கள் இல்லை என அபராதம் விதித்தனர். ஆனால் நான் முறையான ஆவணங்களை காட்டிய பிறகு அவர்கள் என்னை விட்டு விட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் திரித்து எழுதியுள்ளார். உண்மையில் அவரை தான் போலீஸ் பிடித்தது. என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று அவர் முடிவு செய்து விட்டார். எழுதுபவர்கள் எழுதட்டும் நான் முன்னேறிக்கொண்டு செல்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.